காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

வித்தியாசம்

September 25, 2012


ஏங்க..,”

"எனக்கு நம்ம சுபாவை நினைச்சா சந்தோஷமா இருக்குங்க…”

என்ன திடீர்ன்னுஎப்ப பாரு அவளைத் திட்டிக்கிட்டு தானே இருப்ப நீ.."

“ஆமா… ஒரு வேலை கூட செய்யறது இல்லைன்னு திட்டுறேன் தான். ஆனா பாருங்க, நேத்து நாம ஊருக்கு போயிட்டோமே, பொண்ணா பொறுப்பா சமைச்சு எடுத்துக்கிட்டு, தம்பிக்கும் போட்டுக் குடுத்திட்டு, பாத்திரமெல்லாம் தேய்ச்சு கழுவி வைச்சிட்டு, வீடு கூட்டி சுத்தம் செஞ்சிட்டு காலேஜ் போயிருக்கா அதான்"

வருஷம் பூராவுமா வேலை செய்யறா உம் பொண்ணுஎன்னமோ தெரியாத்தனமா ஒரு நாள் வேலை செஞ்சிட்டாதுக்கு போய் சந்தோஷப்படுறியே…”

இல்லைங்கஅவளுக்கு ஒண்ணும் செய்யத் தெரியலையோன்னு நினைச்சேன். கல்யாணம், குடும்பம்ன்னு ஆகறப்போ எப்படி சமாளிப்பாளோன்னு கவலைபட்டுக்கிட்டு இருந்தேன்ஆனா அப்படி இல்லசெய்யத் தெரியுது, அவளுக்குஆனா செய்யறதில்லை.. அவ்வளவு தான்… 

"அவ இங்க வேலை செய்யணுமின்னு இல்லதெரிஞ்சுக்கிட்டா போதும். கல்யாணம், குடும்பம்ன்னு ஆனா பொண்ணுங்களுக்கு ஓய்வு ஏது…"

"பரவாயில்லை நம்ம சுபாஅவளை பத்தி எனக்கு தைரியம் வந்திருச்சு..”

நேத்து அவ வெச்சிருந்த சாம்பார் கூட நல்லாதான் இருந்துச்சுகொஞ்சம் உப்பு பத்தலை அவ்வளவு தான்…”  
----------------------
"என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கா உன் பொண்டாட்டி..?"

"ஏன்ம்மா?"

இன்னிக்கு பாத்திரமே தேய்க்காம போயிருக்காஎல்லாத்தையும் நான் தேய்ச்சேன் இன்னிக்கு…”

"அட…, இன்னிக்கு ஆபீஸ்க்கு கொஞ்சம் சீக்கிரம் போகணுமின்னு சொல்லிட்டு இருந்தாம்மா சுபத்ரா, அதனால விட்டுட்டு போயிருப்பாளா இருக்கும்."

"அப்படி சீக்கிரம் கிளம்பணுமின்னு நினைக்கறவ காலையில நேரத்துல எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டு தானேடா போயிருக்கணும்.."

"இன்னிக்கு ஒரு நாள் வந்துதான் தேய்ச்சிக்கட்டுமே ம்மா!!!"

"அது எப்படிடா, ஒரு நாள்ன்னாலும் செய்யாம போகலாம்தினமும் சாப்பிடல, குளிக்கல…”

வீட்டுல வேலை ஜாஸ்த்தின்னு ஆபீஸீக்கு லேட்டா போவாளாவெறுமனே குவிச்சு வெச்சிட்டு போயிட்டா எந்த வேலைக்காரி வந்து செய்வான்னு நினைச்சுக்கிட்டு போயிருக்கா அவ…”

"அப்படியாவது நல்லா சமைக்கவாவது செய்யறாளா, ஏதோ ஒண்ணாவது உருப்படியா செய்யறாளேன்னு சொல்றதுக்கு. அதுவும் இல்லை, நேத்து சாம்பார் ன்னு ஒண்ணு வைச்சிருந்தாளே உப்பே போடாம… இந்த அழகுக்கு பாத்திரம் தேய்க்க கூட நேரமில்லையாம்மா அவளுக்கு.." 

Read more...

கடுப்பேற்றிய புலி

August 17, 2012

பிரயாணத்துக்கு தயாராகும் போது முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துவைத்துக்கொள்வது, பின்னரே டிக்கெட்டு, துணிகள் போன்றதை அடுக்குவது, ஹேண்ட் பேக் வாங்கும் போது ஒரு புத்தகமாவது வைக்கும்படி கொஞ்சம் பெரியதாக வாங்குவது, அனுமார் வாலைப்போல் நீளமான, வாங்கவேண்டிய புத்தக லிஸ்ட்டை வைத்திருப்பது, அதை பொழுதனைக்கும் update வேறு செய்வது, பின்னாடி வீடு கட்டும் போது வரவேற்பறையுடன் கூடிய நூலகம் ஒன்றையும் கட்டவேண்டும் என்று நினைத்துக் கொள்வது... இப்படி ஒரு புத்தக பிரியர்க்கு உண்டான அத்துணை விஷயங்களும் உண்டு என்னிடத்தில்...

இப்போது தான் புத்தக பிரியை, ஆரம்ப காலத்தில் எல்லாம் புத்தக வெறியை தான் நான்.. பாடபுத்தகத்தை தவிர ஏதேனும் ஒரு கதைபுத்தகத்தை படித்துக் கொண்டேயிருப்பது, அதனால் எப்போதும் வீட்டில் வாங்கிக் கட்டிக்கொள்வது, பரிட்சையில் மார்க் கம்மியாக வாங்கி முதுகில் டின் வாங்குவது என்று...  அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..

புடவை கடைக்கும் வளையல் கடைக்கும் போய் ஏதும் வாங்காமல் வந்த நாட்கள் கூட உண்டு, ஆனால் புத்தக கடைக்குப் போய், கையை வீசிக்கொண்டு வந்ததேயில்லை.. அப்படிப்பட்ட என்னை 'புத்தகங்கள் என்பதே பொய்களடா...  வெறும் டைப் அடிக்கப்பட்ட வரிகளடா... என்று புலம்ப வைத்துவிட்டது ஒரு புத்தகம்...


2008க்கான Man Booker பரிசை அரவிந்த் அடிகாவின் 'The White Tiger' என்னும் நாவல் வென்றிருக்கின்றது என்று படித்தவுடன் என்னுடைய லிஸ்ட்டில் mark செய்து வைத்துக் கொண்டேன்... இத்தனை வருடங்களுக்கு பிறகு 10 நாட்களுக்கு முன்னாடி விதி என்னை mark செய்தது... அதோடு விடாமல் பர்ஸில் இருந்து 300 ரூபாய்க்கு வேட்டும் வைத்தது.

 ஒருவழியாக நேற்று தான் கஷ்டப்பட்டு படித்து முடித்தேன்...  கதை என்கிற வஸ்த்து/வெங்காயம்/புடலங்காய்/புண்ணாக்கு என்பது கூட தேவையில்லை... குறைந்த பட்சம் வர்ணனைகளாவது ஸ்வாரஸ்யமாக இருக்க வேண்டாமா...  அதுவும் இல்லை...

உண்மையில் சேத்தன் பகத் நாவல்களில் கதை என்பதில் புதிய விஷயம் ஒன்றும் இருக்காது... ஆனாலும் அந்த நக்கல்கள், நையாண்டிகள் ரசிக்க கூடியவையாக இருக்கும்.. அது கூட இதில் இல்லை..

ஒற்றனில் வரும் பிராவோ போல் ஸ்கெட்ச் போட்டு, சார்ட்டு போட்டுக் கொண்டு கதை எழுத வேண்டாம்... ஆனால் ஒரு characterizationஆவது இருக்க வேண்டாமா...

இந்த நாவல் முழுவதும் இந்தியாவில் உள்ள - ஏற்றத்தாழ்வுகள், லஞ்ச லாவண்யங்கள், சீர்கேடுகள் இவைகள் (மட்டும்) தான் உள்ளது... யார் சொன்னது இந்தியாவில் இதெல்லாம் இல்லையென்று... அதையெல்லாம் பட்டியல் மட்டும் போட்டால், அதற்க்கு பெயர் நாவலா..? அதற்க்கு பரிசு வேறா... கதை, நாவல் என்று சொல்லி பரிசு தந்திருக்கக் கூடாது... ஒரு article, coverage என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்... ஆனால் அப்போதும் பரிசு தருவதற்க்கெல்லாம் இல்லை.

321 பக்கம் இருக்கும் 300 ரூபாய் விலையுள்ள இந்த புத்தகத்தில் சற்றேனும் ஆறுதல் அளித்த ஒரே வரி இது தான்... "One fact about India is that you can take almost anything you hear about the country and turn it upside down and then you will have the truth about that thing"

இந்த.. இந்தியாவில் பிறந்துவிட்டு, வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, அல்லது வெளிநாடுகளில் பிறந்து அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து கொண்டு.. ஆனால் அதே சமயம் இந்தியாவில் உள்ள மார்க்கெட்டையும் விட்டு விட முடியாமல், இந்தியா தான் என் வேர், கிளைகள் இருப்பது மட்டும் இங்கிலாந்து, அமெரிக்காவில் என்று சொல்லிக்கொண்டு, நம்மை தொல்லை செய்யும் வியாபார நோக்குடையவர்களை கண்டால்..... கொலைவெறி தான் வருகிறது...

Slumdog millionaire, The White tiger போன்றவையெல்லாம் வெளிநாடுகளில் புகழ் பெறுவதற்கு காரணமே அவை இந்தியாவின் இருண்ட பக்கங்களை மட்டுமே காட்டுவது தான்  போலிருக்கின்றது..

கொட்டாவி விட்டுக் கொண்டு, மணியை பார்த்துக் கொண்டு, தூங்கி வழிந்து கொண்டு, வேண்டாவெறுப்பாக படித்த முதல் நாவல் இது தான்...

"Blazingly Savage And Brilliant" - Sunday Telegraph
"A Master Piece" - The Times

இப்போது Sunday Telegraph, The Times பத்திரிக்கைகளை பற்றியும், Man Booker விருதைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து போய்விட்டது எனக்கு...

இந்த அழகில், இந்த கதையைப் படமாக எடுத்தால் அந்த ஹீரோ(!!!!!) வேடத்துக்கு பொருத்தமானவர் ரஜினி தான் என்று அடிகா சொல்லியிருக்கிறார்... ரஜினிக்கு இதைவிட மோசமான வேஷமே கிடைக்காது..

ஒன்று மட்டும் நிச்சயம்... அந்த பரிசு வாங்கியிருக்கு, இந்த பத்திரிக்கையில் நல்லதாக போட்டிருக்கிறார்கள் என்று நம்...பி... எதையும் வாங்கப்போவதில்லை நான்...

உண்மையில் இது புலி கூட இல்லை.. கழுதைப்புலி...
கடுப்பேற்றிய கழுதைப்புலி .... 

Read more...

அட்வர்டைஸ்மெண்ட் அபத்தங்கள்

October 22, 2011


 டிவில அரைமணிநேரம் ஒரு நிகழ்ச்சிய பார்த்தோம்ன்னா அதுல எப்படியும் ரெண்டு விளம்பர இடைவேளை வந்துடுது… பாட்டு படறது, சீரீயல், பாடல்கள், ஆடல் நிகழ்ச்சிகள்ன்னு ஒரே மொக்கை நிகழ்ச்சிகளா தான் இருக்கும்.. படங்களைத் தவிர உண்மையிலேயே நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சின்னு ஒன்னு டிவில கிடையவே கிடையாது. டைம் பாஸ், கொஞ்சம் ரிலாக்ஷேஷன் அப்படி இப்படின்னு வேற வழியில்லாம தான் டிவி பார்க்க வேண்டியிருக்கு…

ஆனாலும் அதுல வர்ற விளம்பர இடைவேளைங்கறது அடுத்த சேனலை மாற்றுவதற்கே… பல சமயத்துல நிகழ்ச்சிகளைவிட விளம்பரங்களே அருமையாக இருப்பதும் உண்டு. சிலது கொஞ்சம் மொக்கையாகவும், சிலது ரொம்ப அபத்தமாகவும் இருக்கும்.. அதுல சிலவற்றை பற்றி…
  • பொம்மிஸ் நைட்டீஸ்
ஒரு குடும்பத்தலைவி எதிரில் வந்தா சூடான விவாதமெல்லாம் மாறிடுமாம்… என்ன கொடுமை சார்… அது கூட பரவாயில்லை.. அதுக்கும் நைட்டீக்கும் என்னப்பா சம்பந்தம்… ஸ்.. ப்பா…
  • Johnson & Johnson Baby wipes
துணி உபயோகித்து குழந்தையை துடைத்தால் rashes வருமாம்.. அதனால இதை உபயோகியுங்கள்ன்னு…

பிறந்த குழந்தைகளுக்குன்னு ஒரு துணி இருக்கும் பாருங்க அந்த வீடுகள்ல்ல.. அப்பா.. அவ்வளவு மென்மையா இருக்கும்.. குழந்தை மென்மையா இல்ல அந்த துணி மென்மையான்னு தாராளமா பட்டிமன்றமே வைக்கலாம்… பிறந்த குழந்தைக்கான எல்லா விஷயங்களுமே இவர்களிடம் வாங்கவைப்பதற்கான தந்திரமே இது…

  • Baby Diapers

குழந்தைகள் வீட்டில் உலர்ந்த உடைகளோடு ஆடவும் பாடவும் செய்வார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.. இது தவறல்லவா.. குழந்தைகளை வெளியில் அழைத்துப் போகும் போது தான் diaper போடவேண்டும்… பஸ்ல குழந்தையை எடுத்து செல்கிறோம்… அப்போ அவசரம்ன்னா என்ன செய்வோம்… அந்த மாதிரியான சமயங்களிலே தான் நாம diaper உபயோகிக்க வேணும்.. அதைவிடுத்து வீட்டிலிருக்கும் சமயங்களிலே கூட செய்வதென்பது குழந்தையை படுத்தியெடுப்பதே ஆகும்..

ஆனால் அந்த விளம்பரங்களில் எல்லாம் வீட்டில் இருக்கும் போதும், இரவிலும் பயன்படுத்துங்கள் என்றே சொல்கிறார்கள்… அது அபத்தத்தை தவிர வேறேன்ன.. 
  • Sanitary pad விளம்பரங்கள்…
ஸ்..ப்பா… நாசூக்கு… அது எப்படி இருக்கும்.. எத்தனை கிலோங்கற மாதிரி தான் இருக்கும்…
  • Toothpaste விளம்பரங்கள்
அந்த flavor இருக்கு, உப்பு இருக்கு, அது இருக்கு, இது இருக்குன்னு சொல்றாங்க.. அதனால தான் germs போகும்ன்னு சொல்றாங்க… உண்மையில் டூத்பேஸ்ட் உபயோகிப்பதே ஒரு வாசனைக்குத் தான்… மற்றபடி தினமும் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கி, சாப்பிட்ட பின் (3 வேளையும்) வாய் கொப்பளித்தால் தான் அந்த கிருமிகள் போகும்… 

அந்த விளம்பரங்களில் இரண்டு வேளையும் முறையாக பல்விளக்கவேண்டும் என்று சின்ன எழுத்தில் போட்டிருப்பார்கள்…

டூத்பிரஷ் விளம்பரங்களும் அவ்வாறே….

இந்த வரிசையில் இன்னும் கொஞ்சம் இருக்கு… முடிந்தால் இன்னொரு பதிவாக போடுகிறேன்…

Read more...

சித்தேஸ்வரன் மலை – ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம்

October 19, 2011



பாலமலை என்றும், சித்தேஸ்வரன் கோவில் இருப்பதால் சித்தேஸ்வரன் மலை என்றும் சொல்லப்படும் அந்த மலை ஈரோடு மாவட்டம், பவானி அருகே (1/2 மணி நேரப் பயணம்) உள்ள குருவரெட்டியூர், ஊமாரெட்டியுர் அருகே உள்ளது.. இதை மலை என்று சொல்வதைக் காட்டிலும் மலைத்தொடர் என்று சொல்வதே சரி. மேட்டூர் அணையில் தேக்கப்படும் நீர் இந்த மலைத் தொடர்களின்  அரவணைப்பில் தான் இருக்கின்றது... குருவரெட்டியூரில் இறங்கி மலைக்கு எப்படி போகணும் என்று கேட்டாலே சொல்லிவிடுவார்கள்... அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் யாரையும் கேட்கவே வேண்டாம்.. கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று கொண்டிருப்பார்கள்...

வருடத்தில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள், (3வது வாரம் ரொம்ப விஷேஷம்), சித்திரை 1ம் தேதி, அமாவாசை போன்ற நாட்களிலேயே மக்கள் வருவார்கள்... மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமில்லாத, அடர்ந்த ஒரு வனமாக காட்சியளித்து நம்மை பயமுறுத்தும்..

அடிவார பிள்ளையார் கோவிலையும், அங்கே இருக்கும் சிவனையும் வணங்கிவிட்டு, படிகளில்லாத, கற்களும், பாறைகளுமாய் இருக்கும் அந்த தடத்தில் நடக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.. அவரவர் உடல் வலிமையை பொறுத்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறையோ, அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறையோ சற்று உட்கார்ந்து, தண்ணீர் அருந்தி இளைப்பாறிவிட்டு பயணத்தை தொடரலாம்...நேரம் ஆக ஆக... அடர்ந்த காட்டுக்குள் நீங்கள் சென்று கொண்டிருப்பதை உணர்வீர்கள்.. கீழே கிராமங்களில் வெயில் வருவதையும் உங்களால் பார்க்க முடியும்..

இது தான் ஆரம்பம்

அப்படியே சென்று கொண்டிருந்தால், முதலில் வருவது வெத்தலைப்பாறை என்ற இடம்... பாறைகள் பார்ப்பதற்கு வெத்தலை போல இருக்காது.. ஆனா நல்ல நீநீநீ….நீளமாக இரண்டு, மூன்று பாறைகள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு வசதியாக இருக்கும்... முன்பெல்லாம் மக்கள் அங்கே உட்கார்ந்து வெத்தலை போட்டுக் கொண்டு, சிரமபரிகாரம் செய்து கொண்டு பயணத்தை தொடர்வார்களாம்அதனால் வெத்தலைப்பாறை என்று பெயராம்

அடுத்து வருவது திம்மம் பொதி.. அங்கே சிமெண்டினால் கட்டப்பட்ட நல்ல அகலமான ஒரு தளம் இருக்கும்.. தானியங்களை காயவைக்கவும், பயணிகள் ஒய்வெடுப்பதற்கும்.. அங்கே 2, 3 கடைகளும் உண்டுசுக்கு காப்பி, டீ, கம்மங்கூழ், அங்கே விளையும் கொய்யா, மாதுளை, சீதாப்பழங்களையும் விற்பார்கள்…  பச்சை படிக்கட்டுகள் போன்ற விளைநிலங்கள், சினிமாவில் பார்த்திருக்கும் ஊட்டி எஸ்ட்டேடுகளைப் போன்ற அமைப்பை பார்க்குப் போதே தெரியும், நாம் திம்மம்பொதியை நெருங்கிட்டோம்ன்னு சொல்லும்..

இந்த இடத்தில் தான் சில வீடுகளை பார்க்க முடியும்.. அடிவாரத்திலிருந்து திம்மம்பொதிக்கு வர்றதுக்கு எங்களுக்கு 2 மணிநேரம் ஆச்சு.. ஒட்டுமொத்தமாக 2 மணிநேரத்திலேயே கோவிலை அடைந்துவிடுபவர்களும் இருக்கின்றார்கள்பொதுவில் மலை ஏற ஏற, கால்கள் கெஞ்சும்… 10 நிமிடங்களுக்கு ஒரு முறை உட்காரச் சொல்லி அழும்.. அதிலும் சின்ன குழந்தைங்கல்லாம்.. அப்பா.. கால் வலிக்குதுப்பா.. கொஞ்ச நேரம் உக்காரலாம்ப்பா.. என்று சொல்வார்கள்அவ்வளவு தாண்டா.. கோவில் வந்துருச்சுடா.. இப்படி போயி, அப்படி வந்தா ஆச்சு.. வா.. வா.. என்று இழுத்துக்கொண்டு போவார்கள்.. இத்தனைக்கும் 1 மலை கூட வந்திருக்கமாட்டார்கள்.. (பாலமலை 7 மலைகளை கொண்ட தொடர்).. பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும்.. பார்த்துக் கொண்டு மட்டும் இல்லாமல், எட்டி நடை போட்டால் தான் நாமும் சூரிய வெளிச்சம் மறையும் முன் வீடு வந்து சேரலாம்..

ஆனால் சூரிய வெளிச்சம் மறைந்த பின் ( மாலை 6, 7 மணிக்கு ) பயணத்தை ஆரம்பித்து, விடிவதற்குள் மலை இறங்கி வருபவர்கள் தான் அதிகம் இங்கேஅதை நினைத்தாலே சிலிர்க்கின்றது எனக்குபட்ட பகலில் மலை ஏறுவதில் கால்கள் தான் வலிக்குமே அன்றி, வேறு சிரமங்கள் இல்லை.. இரவில் ஏறுவதானால்அடேயப்பா…!!! ஆனால் இரவில் தான் அதிக கூட்டம் இருக்கின்றது.. டயர்களை கொளுத்திக் கொண்டும், டார்ச்சு லைட்டுகளை ஏந்திக்கொண்டும் சாரி சாரியாய் மக்கள்

அடுத்த இடம் பெரியகுளம்வருஷந்தோறும் வருபவர்கள், அடிவாரத்தில் ஏற ஆரம்பித்த பின் பெரியகுளம் வந்து தான் நீண்ட ஒய்வெடுப்பார்களாம்.. (அதிகபட்சமாய் 1/2 மணி நேரம்..) பெரியகுளத்தையும் தாண்டி வந்துகொண்டிருக்கையில் ஓரிடத்தில் பாறைகளுக்கிடையில் நீரோடை உண்டு.. அதில் தண்ணீர் எடுத்து கொண்டு, சர்வ சாதாரணமாய் போய்க்கொண்டிருப்பார்கள் மலைக்காரர்கள் என்ற உள்ளூர்வாசிகள்.. தண்ணி பாட்டிலையும், இட்லி, சாப்பாட்டு பொட்டலங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்லும் நாம் தஸ்ஸு புஸ்ஸு என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, தண்ணிக் குடம், மூங்கில் கட்டுகள், விற்பதற்கு பெரிய பெரிய மூட்டைகள் என்று மலைக்காரர்கள் தூக்கிக் கொண்டு போவதை பார்த்தாலே பக்குன்னு இருக்கும் நமக்கு…  

நாங்கள் பார்த்த போது வீடு கட்டுவதற்கு கருங்கல்லையும், சிமெண்ட்டு மூட்டைகளையும் சுமந்து கொண்டு போனார்கள்நல்லா ஸ்ட்ராங்கா இருக்காங்க என்று சொல்லிக்கொண்டாலும்ஒரு அவசர ஆபத்துக்கு கூட அவர்கள் இவ்வளவு பெரிய மலைத்தொடரை தாண்டித்தான் வரவேண்டும் என்பது ரொம்ப கொடுமையான விஷயமே!!!! இப்பொழுதும் பிரசவ வலி கண்டுவிட்டால், மூங்கிலில் தொட்டில் கட்டித்தான் அடிவாரம் வரை அழைத்து வர வேண்டுமாம்.. நினைத்தாலே மயங்கிவிழுந்துவிடுவோம் நாம்..


மலைத் தொடர்
இப்படியாக ஒருவழியாக இஷ்டப்பட்டு கஷ்ட்டப்பட்டு சித்தேஸ்வரரை தரிசித்தோம்... கோவில் சிறிது தான்.. அதிலும் ஒரு பக்கமே தடுப்புகள் உண்டு.. இன்னொறு பக்கம் சற்றே எட்டுப் பார்த்தால், கிடு கிடு பள்ளம்... கோவிலின் முன்புறம் நின்று பார்த்தால் குட்டியாக மேட்டூர் அணையும், அந்த கூண்டுகளில் இருந்து வரும் புகையும் தெரியும்... 

ஒருவழியாக சித்தேஸ்வரரை வணங்கியாச்சு.. ஏறது தான் கஷ்ட்டம்.. இறங்கறது சுலபம்ன்னு நினைச்சீங்க.... ம்ஹீம்... தப்பு... இறங்குவது தான் சிரமம்.. மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது.. ஆனால் கால்கள் நிற்காமல் இறங்கிக் கொண்டிருக்கவே சொல்லும்... தப்பித் தவறி நின்றால் நடுங்கும்... ஆனால் ஏறியதை விட வேகமாக இறங்கிவிட முடியும்... பத்திரமாய் இறங்கிவிட்டதற்கு அடிவார பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடலாம் சந்தோஷமாய்... ஏனெனில் சித்தேஸ்வரன் மலைக்கு செல்வது என்பது ஒரு சிலிர்ப்பூட்டும் பயணம் மட்டும் அல்ல, சற்றே சிரமமான பயணமும் கூட.. மனமென்னும் பேட்டரி ஃபுல் சார்ஜ் ஆகிவிட்டாலும், உடலில் உள்ள பேட்டரி  ரொம்ப கீழிறங்கிவிடும்... ரெண்டு நாட்களாகும் மீண்டும் சார்ஜ் ஏற... 

பலர் பக்தியின் காரணமாகவும், சிலர் உடலுக்கு ஒரு பயிற்சி என்று சொல்லிக்கொண்டும் செல்வார்கள்.. எது எப்படியோ.. ஓரளவு உடல் வலிமை உள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் சித்தேஸ்வரர் கோவில்...

Read more...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP